Skip to content
Home » கரூர் அரசு பள்ளி மாணவர்கள் முதல்வருக்கு தபால் மூலம் பிறந்தநாள் வாழ்த்து..

கரூர் அரசு பள்ளி மாணவர்கள் முதல்வருக்கு தபால் மூலம் பிறந்தநாள் வாழ்த்து..

இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில்,

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம் தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தனது 70 வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதனையொட்டி

தொட்டியப்பட்டி அரசு பள்ளி மாணவ மாணவிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தமிழக முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, 70 தபால் அட்டைகள் தயாரித்து அதில் தங்களது வாழ்த்துகளை அனுப்பி வைத்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பழமை மாறாமல் கரூரை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் தபால் அட்டை மூலம் வாழ்த்து அனுப்பிய சுவாரசிய நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!