Skip to content

கரூரில் ……. அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் அரசு மருத்துவரை கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக பணி பாதுகாப்பு கேட்டு தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம், இந்திய மருத்துவ சங்கம் இணைந்து மருத்துவர்கள், மற்றும் மருத்துவ பயிற்சி மாணவ மாணவிகள், செவிலியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும், உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!