Skip to content

கரூர்… குப்பை கிடங்கில் மீண்டும் தீ … தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

கரூர், 5 ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனியில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் தேங்கும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு இந்த குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பை கிடங்கில் குப்பைகள்  மலைபோல் குவிந்து கிடக்கிறது.

நேற்று இரவு சுமார் 8 மணியளவில் குப்பை கிடங்கில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எனினும் காற்றின் வேகத்தால் தொடர்ந்து தீ பரவி கொண்டே இருந்தது. மேலும், குப்பைகளில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் 5-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் கரூர்-வாங்கல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த குப்பை கிடங்கில் கடந்த 30 ம் தேதி தீ விபத்து ஏற்பட்டு தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். இந்த நிலையில் ஒரே வாரத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!