Skip to content

கரூர் மாவட்டத்தில் மழை…பொதுமக்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் காலை முதல் கருமையாக சூழ்ந்து குளிர்ச்சி காற்று வீசி வருகிறது.

இந்த நிலையில் கரூர் மாவட்ட புறநகர் பகுதியான கிருஷ்ணராயபுரம், மாயனூர்,புலியூர், உப்பிடமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்து வருகிறது.

கரூர் மாநகர பகுதியான பசுபதிபாளையம், காந்திகிராமம், ஜஹகர்பஜார், ராயனூர்,தான்தோன்றிமலை, சுங்க

கேட் ஆகிய பகுதியில் லேசான மழை பெய்து வருகிறது.

தற்போது பெய்து வரும் மழையால் கரூர் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிகழ்கிறது.

இந்த மழையால் விவசாயிகள்,பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!