Skip to content

கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ… பனிமூட்டம் போல் காட்சியளிக்கும் கரும்புகை..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு கரூர் – வாங்கல் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கடந்த 31ஆம் தேதி மாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

மலை போல் குவிந்து கிடந்த குப்பை கிடங்கில் பற்றிய தீயானது மளமளவென எரிய தொடங்கியதை தொடர்ந்து கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்க ஆரம்பித்தனர்.

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து பற்றி எரிந்த தீ,சிறிது சிறிதாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு ஐந்தாவது நாளில் தீயை அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் அதே குப்பைக்கிழங்கில் தீயானது மீண்டும் பற்ற தொடங்கியது, புகை மூட்டத்துடன் தொடங்கிய

தீயானது,குவிந்து கிடக்கும் குப்பை கிடங்கில் ஒரு சில இடங்களில் கரும் புகை மூட்டத்தில் எரிய தொடங்கியது.

கரும் புகை சூழ்ந்ததால் கரூர் வாங்கல் சாலை புகை மண்டலமாக காட்சியளிக்கிறது, கரூரில் இருந்து வாங்கல்,மோகனூர், நாமக்கல் செல்வதற்குக்கான பிரதான சாலை என்பதால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

தொடர் புகை காரணமாக அப்பகுதியில் வசித்து வருபவர்களுக்கு சுவாச கோளாறு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது என கூறுகின்றனர்.

இந்த நிலையில் குப்பை கிடங்கு முழுவதுமாக அனைக்க மாநகராட்சி லாரியில் மூலம் தண்ணிகள் கொண்டுவரப்பட்டு அனைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைந்துள்ள கரூர் தீயணைப்பு மீட்பு பணி வீரர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!