Skip to content

கரூரில் காவிரி ஆற்றில் மணல் குவாரியில் மணல் அள்ளும் பணிகள் நிறுத்தம்…

திண்டுக்கம் மற்றும் புதுக்கோட்டையில் மணல் ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்த மல்லம்பாளையம் கிராமத்தில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை எதிரொலியாக இந்த குவாரி இன்று செயல்படவில்லை. குவாரி நுழைவு வாயிற் பகுதியில் பேரிக்கார்டு வைக்கப்பட்டு வாகனங்கள் உள்ளே செல்ல தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கு பலரும் வேலையில்

ஈடுபட்டிருப்பது வழக்கம் அங்கு தற்போது ஒருவர் கூட இல்லை. ஆற்றுக்குள் லாரியில் மணல் ஏற்றச் செல்லும் தற்காலிக சாலை பாதியில் பொக்ளின் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மணல் குவாரியிலிருந்து மணல் சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லும் லாரிகள் இயக்கப்படாததால் வாங்கல் கடைவீதி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், மணல் அள்ளும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மணல் சேமிப்பு கிடங்கில் லாரிகள் எதுவும் இல்லாததால் வெறிச்சோடி கிடக்கின்றன.
அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை எதிரொலியாக கரூரில் மணல் குவாரியில் பணி முழுவதுமாக நிறுத்தம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!