Skip to content

கரூர் மாரியம்மன் கோவில்.. சேஷ வாகனத்தில் அம்மன் திருவீதி உலா…

கரூர் தேர் வீதி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன்  கோயிலில் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாரியம்மன் சேஷ வாகனத்திலும், மாவடி ராமசுவாமி சிறப்பு அலங்காரத்திலும் திருவீதி உலா காட்சியளித்தனர்.

திருவீதிஉலா கோயிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் கோயிலை வந்தடைந்தது. அதை தொடர்ந்து சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் சேஷ வாகன திருவீதி உலா காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!