Skip to content
Home » மதுபாட்டில்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து… டிரைவர் உட்பட 3 பேர் காயம்…

மதுபாட்டில்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து… டிரைவர் உட்பட 3 பேர் காயம்…

  • by Senthil

கரூர் மாவட்டம், துளிர்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு வாணிப நுகர்பொருள் கழகம் குடோனில் இருந்து மாயனூர் பழைய ஜெயங்கொண்டம் மகாதானபுரம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான பாட்டில்கள் சரக்கு வேனில் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த சரக்கு வேனினை முனையனூரைச் சேர்ந்த தனபால் என்பவர் ஓட்டி வந்துள்ளார். திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆர் புதுக்கோட்டை என்ற இடத்தின் வந்தபோது சரக்கு வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையின்

குறுக்கே நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் டிரைவர் மற்றும் லோடு மேன் இருவரும் காயம் அடைந்தனர். மேலும் வேலையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் சேதமடைந்தன. இது குறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!