கரூர் மாவட்டம் வை. புதூரை சேர்ந்தவர் செல்லாண்டி. வயது 27 இவர் மகாதானபுரத்தில் உள்ள ஒரு மெடிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
செல்லாண்டியும், புதுப்பட்டியைச் சேர்ந்த தவமணி என்பவரும் காதலித்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர்.
கடந்த ஒன்றரை வருடங்களாக நன்றாக சென்று கொண்ட குடும்ப வாழ்க்கையில் குழந்தையின்மை
பிரச்சனை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு தவமணி தனது தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால் மீண்டும் அவர் செல்லாண்டியுடன் சேர்ந்து வாழாததால் செல்லாண்டி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்து உள்ளார்.
மேலும் செல்லாண்டியின் வீட்டில் அவருக்கு வேறு திருமணம் செய்து வைக்க ஏற்பாடும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
கடந்த 1 1/2 வருடமாக பிரிந்து இருந்த அவரது மனைவி தவமணி செல்லாண்டிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ததால் தனது கணவருடன் சேர்ந்து வாழ்வதாக நீதிமன்றத்தில் கூறியதை அடுத்து கணவன் மனைவி இருவரும் ஒன்றாக வாழ துவங்கினர்.
இந்நிலையில் தவமணி தன்னுடன் வாழாத நீ வேறு யாருடன் வாழக்கூடாது என்றும், கொலை செய்து விடுவதாகவும், அவரது குடும்பத்தினரை அவமரியாதையுடனும் நடத்தி வந்துள்ளார்.
மேலும் இருமுறை வீட்டில் தனியாக இருந்த கணவரை உறவினர்களை வைத்து தாக்கி அவரை கொல்ல முயற்சித்த போது உள்ளூர் மக்கள் அதனை தடுத்துள்ளனர்.
இதனால் தற்போது மகாதனபுரத்தில் மெடிக்கல் கடையில் வேலை பார்த்தபோது தனியாக இருந்த செல்லாண்டியை தவமணியின் உறவினர்கள் ஆறு பேர் கடைக்குள் புகுந்து கடையின் கதவை பூட்டி பாட்டில்கள் மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
செல்லாண்டி அங்கிருந்து அவர்களிடம் தப்பித்து திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓடி வந்துள்ளார்.
அவ்வழியாக வந்த நபரின் செல்போன் மூலம் தனது உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு விரைந்து சென்ற உறவினர்கள் அவரை குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து அனுமதித்தனர்.
கணவனை மனைவியே தனது உறவினர்களை வைத்து தீர்த்துக்கட்ட முயன்ற சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.