கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில் கர்நாடகா வெற்றி குறித்து ராகுல் காந்தி,டில்லியில் அளித்த பேட்டி:
கர்நாடக மக்களுக்கு இதயத்தில் இருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடக தேர்தலில் வெற்றிக்கு பாடுபட்ட கட்சித்தலைவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடக தேர்தலில் ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது’ என்றார்.