Skip to content
Home » காரை சிறுவன் கொலை…. குற்றவாளி கைது

காரை சிறுவன் கொலை…. குற்றவாளி கைது

காரைக்கால் திருப்பட்டினத்தில் திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகே  சந்தோஷ்  என்ற 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்தான். 8ம் வகுப்பு படித்து வந்த சந்தோஷ் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.  உடலில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சந்தோஷ் உடன் இருந்த 19 வயது இளைஞர்  மீது  போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அந்த இளைஞரை போலீசார் தேடி வந்தனர். கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் கையுறைகள் ஆன்லைன் மூலம் வாங்கப்பட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

எனவே  மாணவனை கொலை செய்ய வேண்டும் என  பல நாள் திட்டம் வகுத்து, கத்தி, கையுறை எல்லாம் வாங்கி உள்ளார். இந்த அளவு கொலை வெறி வர காரணம் என்ன என்பது போலீசாருக்கே அதிர்ச்சியாக உள்ளது. கொலையாளியை பிடிக்க போலீசார் அவரது வீட்டுக்கு சென்றபோது வீடு பூட்டி கிடந்தது. அவரது பெற்றோரும் தலைமறைவாகி விட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை கொலையாளியை போலீசார் மயிலாடுதுறையில் கைது செய்தனர். அவரை   விசாரிக்க போலீசார்  காரைக்கால் கொண்டு வந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!