Skip to content
Home » காரைக்கால் மாணவன் கொலை…..ஆன் லைனில் கத்தி வாங்கி வாலிபர் வெறிச்செயல்

காரைக்கால் மாணவன் கொலை…..ஆன் லைனில் கத்தி வாங்கி வாலிபர் வெறிச்செயல்

காரைக்கால் திருப்பட்டினத்தில் திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகே  சந்தோஷ்  என்ற 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்தான். 8ம் வகுப்பு படித்து வந்த சந்தோஷ் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.  உடலில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சந்தோஷ் உடன் இருந்த 19 வயது இளைஞர்  மீது  போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அந்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் கையுறைகள் ஆன்லைன் மூலம் வாங்கப்பட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!