Skip to content
Home » வாழைப்பழம் விற்க செல்லுங்கள்…கிரிக்கெட் வீரர்கள் மீது கபில்தேவ் கடும் சாடல்

வாழைப்பழம் விற்க செல்லுங்கள்…கிரிக்கெட் வீரர்கள் மீது கபில்தேவ் கடும் சாடல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்,  கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது:

நான் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். நாங்கள் ஐபிஎல் விளையாடுகிறோம், எங்களுக்கு அழுத்தம் நிறைய இருக்கிறது  என்கிறார்கள். அவர்களிடம் நான் விளையாடாதீர்கள் என்று சொல்வேன். யார் உங்களை விளையாட சொன்னார்கள்?  அந்த மாதிரியான அழுத்தம் தரக்கூடிய இடத்தில் நீங்கள் ஆடுகிறீர்கள்.  இவ்வளவு அழுத்தத்துடன் நீங்கள் விளையாடினால் உங்களை சிலர் ரசிப்பார்கள், பலர் உங்களை திட்டுவார்கள். இதற்கெல்லாம் நீங்கள் பயந்தால் நீங்கள் விளையாடவே தேவையில்லை. நீங்கள் சொந்த நாட்டுக்காக ஆடும் போது நீங்கள் அழுத்தத்தை உணர்வீர்களா? அது எப்படி சாத்தியம்?.

100 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இருந்து 20 பேர் விளையாடுகிறீர்கள். இதில் உங்களுக்கு அழுத்தம் இல்லை மாறாக இதற்காக நீங்கள் பெருமை கொள்ள வேண்டும். மக்களிடம் இருந்து நீங்கள் அதிகப்படியான அன்பை பெறுகிறீர்கள். அந்தப் பெருமையை பெற கற்றுக்கொள்ளுங்கள். அழுத்தம் என்பது அமெரிக்க வார்த்தை. நீங்கள் வேலை செய்ய விரும்பவில்லை என்றால், வேண்டாம். உங்களை யாரும் கட்டாயப்படுத்துகிறார்களா?. வாழைப்பழ கடை திறங்கள். முட்டைகளை விற்று பிழைத்துக் கொள்ளுங்கள். ஆனால், உங்களுக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது, அதை ஏன் நீங்கள் அழுத்தமாக நினைக்கிறீர்கள். அதை மகிழ்ச்சியாக எடுத்துக்கொண்டு, சந்தோஷமாக ஆடுங்கள். நீங்கள் ஒரு வேலையை செய்ய தொடங்கும் நாளில் இருந்து அந்த வேலை எளிதாக தோன்றும். ஆனால் அதே விஷயத்தை நீங்கள் அழுத்தம் என்று நினைத்தால், அதில் நல்லது எதுவும் வராது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள சில சீனியர் வீரர்களை மனதில் கொண்டே கபில்தேவ் இவ்வாறு பேசியதாக  கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!