Skip to content

கான்பூர் டெஸ்ட்….வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2வது கிரிக்கெட் டெஸ்ட்  உ.பி. மாநிலம் கான்பூரில் கடந்த 27ம் தேதி துவங்கியது. முதலில் வங்கதேசம் அணி பேட்டிங் செய்தது. 25 ஓவரில் 107 ரன்கள் எடுத்திருந்த  நிலையில் பலத்த மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 28,29ம் தேதிகளிலும் மழை பெய்தததால்  ஆட்டம் நடைபெறவில்லை. 4ம் நாளான இன்று  ஆட்டம் தொடர்ந்தது-  வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மொமினூல் ஸ்ரீக் 107 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். பும்ரா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதைத்தொடர்ந்து இந்தியா  பேட்டிங் செய்தது. 4 விக்கெட் இழப்புக்கு(26 ஓவர்) இந்தியா 219 ரன்கள் எடுத்தது.ரோகித்(72), ஜெய்ஸ்வால்(55), கில்(39), பண்ட் (9) அவுட் ஆனார்கள். கோலியும், ராகுலும் நிதானமாக ஆடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!