காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, சி.எஸ்.ஐ., உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு தாய் கிடையாது. தந்தை, ரயில்வே சாலையில் உள்ள சர்ச்சில், தோட்ட வேலை பார்த்து வருகிறார். ஜனவரி மாதம், சி.எஸ்.ஐ., சர்ச் பாதிரியார் தேவஇரக்கம்( 54) வீட்டில் சிறுமி தங்கியிருந்தாக கூறப்படுகிறது. அப்போது சிறுமிக்கு, பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த விவகாரம், சிறுமி வசிக்கும் பகுதியினருக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து முதல்வர் தனிப்பிரிவுக்கு, அப்பகுதியினர் மனு அனுப்பியிருந்தனர். புகார் பற்றி விசாரணை நடத்திய, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்திகாவ்யா, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீசில் பாதிரியார் தேவஇரக்கம் மீது புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து, ‘போக்சோ’ சட்டத்தின் கீழ், பாதிரியார் தேவஇரக்கத்தை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை.. போக்சோவில் பாதிரியார் கைது
- by Authour
