Skip to content
Home » கோவை கொடீசியாவில் கல்யாணமாலை…. அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தார்

கோவை கொடீசியாவில் கல்யாணமாலை…. அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தார்

  • by Senthil

சன் டிவில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையும் கல்யாணமாலை என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதனை கல்யாண மாலை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மோகன் நடத்தி வருகிறார். இது திருமணத்திற்கான வரன் தேடும் நிகழ்ச்சியாகும். இதற்காக  முக்கிய நகரங்களில்  வரன் தேடும் நிகழ்ச்சிகளை அவர் நடத்தி வருகிறார். இதையொட்டி  நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்தில் பட்டிமன்றம்  உள்ளிட்ட சொல்லரங்கங்கள் நடப்பதுடன்,  திருமண  விழாவிற்கான

பட்டுப்புடவைகள், நகைகள் பற்றிய கண்காட்சியும் இடம்பெறும்.

இன்று கோவை கொடிசியா வளாகத்தில் கல்யாணமாலை வெட்டிங் அண்ட் பியாண்ட் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி  குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்க  பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு மற்றும் கோவை நகர முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!