Skip to content
Home » கள்ளச்சாராயம் தொடர்பாக போலீசாருக்கு துப்புக்கொடுத்தவர் கொலை… குற்றவாளியை கைது செய்யக் கோரி மறியல்…

கள்ளச்சாராயம் தொடர்பாக போலீசாருக்கு துப்புக்கொடுத்தவர் கொலை… குற்றவாளியை கைது செய்யக் கோரி மறியல்…

தஞ்சாவூர் மாவட்டம்,  கும்பகோணம் அருகே நரசிங்கம்பேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் தனபால்,32,. கொத்தனார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

இந்நிலையில், தனபால் நேற்றுமுன்தினம் இரவு நரசிங்கம்பேட்டை கடைத்தெரு பகுதியில் தனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, டூ வீலரில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், தனபாலை வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், தனபாலை அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தனபால் உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த திருநீலக்குடி போலீசார், தனபாலை வெட்டிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று, தனபாலின் உறவினர்கள், தனபால் உடல் வைக்கப்பட்டுள்ள கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு திரண்டு, கள்ளச்சாராயம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் தான், வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை வெட்டிய சாராய வியாபாரியை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தனபால் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த கும்பகோணம்

டி.எஸ்.பி., மகேஷ் குமார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், உடலை வாங்கி சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!