Skip to content

நாம்தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகல்.?…

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக உயர்ந்து வருகிறது. திமுக, அதிமுக, பாஜகவிற்கு அடுத்தபடியாக தமிழக்த்தில் வாங்கு வங்கியை கொண்ட அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி திகழ்கிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக அக்கட்சியின் தலைவர் சீமான் பெரியார் குறித்து பேசிய சர்ச்சை கருத்துகளுக்கு பிறகு நிர்வாகிகள் விலகல் அதிகமாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள காளியம்மாள் அக்கட்சியிலிருந்து விலகியதாகத் தகவல் பரவி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 3ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பிதழில் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிட்டுள்ளதால் நாம் தமிழர் கட்சியின் குழப்பம் அடைந்துள்ளனர். கட்சி பொறுப்புகளில் இருந்து விலகுவதாக வெளியாகும் தகவல் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, எல்லோருக்கும் ஒரே நேரத்தில் சொல்ல விரும்புகிறேன்; விரைவில் சொல்கிறேன் என காளியம்மாள் பதில் அளித்துள்ளார்

error: Content is protected !!