Skip to content

அயலக தமிழர் தின விழா…. எம்பி கனிமொழி துவக்கி வைத்தார்…

  • by Authour

இன்று  சென்னை – கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை சார்பில் அயலகத் தமிழர் நாளை முன்னிட்டு நடைபெறும் விழாவை எம்பி கனிமொழி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி விழாவில் உரையாற்றினார். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, வட சென்னை நாடாளுமன்ற

உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சோமு, அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனதிபதி, மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளர் டி.ஜகந்நாதன், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!