Skip to content
Home » கடன் தொல்லை…தாய்-தனது 3 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி… 3வயது சிறுவன் உயிரிழப்பு..

கடன் தொல்லை…தாய்-தனது 3 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி… 3வயது சிறுவன் உயிரிழப்பு..

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே செல்ல பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேலு என்பவர் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உச்சமாகாளி இவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் உச்சிமாகாளி அப்பகுதியில் உள்ள மகளிர் குழுக்களிடம் குடும்ப தேவைக்காக ரூபாய் ஒன்றரை லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது.

இந்தக் கடன் தொகையை வாராந்திர முறைப்படி செலுத்தி வந்துள்ளார். இதில் ஒரு கட்டத்திற்கு மேலாக பணத்தை செலுத்த முடியாமல் இருந்த நிலையிலும், குழு ஊழியர்கள் மீதான அச்சத்தில் வாழ்ந்து வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் தனது கணவர் குழந்தைவேலு வேலைக்கு சென்று நிலையில் தனது 3 குழந்தைகளுக்கும் அரளி கொட்டை விதைகளை அரைத்து கொடுத்துவிட்டு தானும் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து குழந்தைகள் அரளி விதையை சாப்பிட்ட நிலையில் வாந்தி எடுத்து அலறிய நிலையில் அருகில் உள்ளவர்கள் அனைவரையும் மீட்டு தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் மூன்றாவது குழந்தையான 4 வயது பிரவீன் ராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். மற்ற இரண்டு குழந்தைகள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் உச்சமாகாளி கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மாவட்டத்தில் சுய உதவி குழுக்கள் மற்றும் அதனை வசூல் செய்யும் ஊழியர்கள் மீதான அச்சத்தின் வாயிலாக குழந்தைகளுடன் பெண் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!