தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக் கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. பருத்தி மறைமுக ஏலத்திற்கு விற்பனைக் குழு தனி அலுவலர் வித்யா தலைமை வகித்தார். விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலை வகித்தார். ஏலத்தில் கும்பகோணம், இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 1836 விவசாயிகள் சராசரியாக 2182 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். ஏலத்தில் கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம், திருப்பூர் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த 8 வணிகர்கள் பங்கேற்று அதிகப் பட்சம் குவிண்டாலுக்கு ரூ.7132,
குறைந்தப் பட்சம் ரூ.5,500, சராசரி ரூ.6672 என விலை நிர்ணயம் செய்தனர். பருத்தியின் மதிப்பு சராசரி ரூ 1.45 கோடி என மதிப்பிடப்பட்டது.