Skip to content
Home » திருச்சியில் ஜெ., 75வது பிறந்த நாள் விழா ….. மா.செ.ப.குமார் அழைப்பு….

திருச்சியில் ஜெ., 75வது பிறந்த நாள் விழா ….. மா.செ.ப.குமார் அழைப்பு….

  • by Senthil

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார் அறிக்கை வௌியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது….  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 75 வது பிறந்த நாளான 24.02.2023 அன்று  புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு அளவில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்தும், அனைத்து இடங்களிலும் அம்மா  திருவுருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கழக கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மிகுந்த சிறப்புடன் கொண்டாட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!