ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல்கட்டமாக இன்று 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 9 மணி வரை, அதாவது முதல் இரண்டு மணி நேரத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் 13.04 % வாக்குகள் பதிவானது.
இதுபோல பிரியங்கா காந்தி போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு எம்.பி. தொகுதியிலும் 9 மணி வரை 13.04 % வாக்குகள் பதிவானது. இரண்டு இடங்களிலும் மக்கள் ஆர்வமாக வாக்களிக்கிறார்கள்.