Skip to content

ஜெயங்கொண்டம் அருகே பூட்டியிருந்த வீட்டில் தாய் -3 குழந்தைகள் சடலமாக மீட்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் வளவனேரி கிராமத்ததை சேர்ந்தவர் ராஜா இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பானுமதி (35). இவர்களுக்கு 12 வயதில் பிரசாத் என்ற மகனும் இரண்டு வயதில் சாத்விக் சாத்விகா ஆகிய இரட்டை குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் பானுமதி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மீன்சுருட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் பிரேம்குமார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டை திறந்து பார்த்தபொழுது, பூட்டியிருந்த வீட்டில் தாய் பானுமதி மற்றும்‌ குழந்தைகள் பிரசாத், சாதிவிக், சாத்விகா ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர்.
சடலம் துர்நாற்றம் வீசுவதால் இறந்து 3 நாட்கள் ஆகி இருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ராமச்சந்திரன் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
இது கொலையா? அல்லது தற்கொலையா? என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் வளவனேரி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!