Skip to content

ஜெயங்கொண்டம் அருகே சாலை ஓரம் கொட்டப்பட்ட பூக்கள்…. பரபரப்பு.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் அர்த்தனேரி – அணைக்குடம் கிராமத்திற்கு இடைப்பட்ட பகுதியில் சாலை ஓரம் கொட்டப்பட்ட ஒரு லாரி பூக்களால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை ஓரம் கொட்டிய பூக்கள் வாசம் மிகுந்த பெரிய ரோஜா, சின்ன ரோஜா, செவ்வந்தி, மற்றும் திருமண நிகழ்ச்சிக்கு பயன்படுத்த கூடிய வண்ண பூக்கள் என கொட்டி கிடக்கிறது. இதனை சாலையில் பார்த்து

செல்லும் பொதுமக்கள் மனம் வேதனையுடன் பார்த்து செல்கின்றனர். இந்த பூக்கள் கொட்டி கிடைப்பதற்கு விலை வீழ்ச்சியா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தெரியவில்லை. இருப்பினும் கும்பகோணம்- சென்னை மார்க்கெட் செல்லக்கூடிய வாகனங்களில் இருந்து பாதியில் சாலையின் ஒரம் கொட்டப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. சாலை ஓரம் கொட்டப்பட்ட ஒரு லாரி பூக்களால் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!