Skip to content

ஜெயங்கொண்டம் அருகே மர்மமாக இறந்து கிடந்த தூய்மை பணியாளர்….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றிய முத்தையன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியாளர் குறைப்பு என்ற முறையில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள அம்மா உணவகத்திற்கு முன்பு உயிரிழந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது . இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் முத்தையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்து போன முத்தையனுக்கு ,இந்திரா

காந்தி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர் .இறந்து போன முத்தையன் வீட்டிற்கு செல்லாமல் அம்மா உணவகத்திற்கு முன்பாகவே ஒரு ஓரத்தில் தங்கி இருந்து வந்துள்ளார்.அவரது மகன்கள் மற்றும் மனைவி வீட்டிற்கு வருமாறு அழைத்தும் அவர் வர மறுத்து கடந்த ஒரு மாத காலமாக அம்மா உணவகத்துக்கு முன்பாகவே தங்கி இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!