அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் அணில் என்கிற பிரேம்குமார் இவர் 2 1/2 அடி நீளம் உள்ள கத்தியை முதுகில் சொருகியவாறு கஞ்சா போதையில் பொதுமக்களை மிரட்டும் வகையில் சுற்றி திரிந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து அணில் என்கிற பிரேம்குமாரை தேடி வந்தனர் இந்நிலையில் அவர் ஜெயங்கொண்டம் அருகே கொம்மேடு செல்லும் பாதையில் சுடுகாட்டு பகுதிக்கு அருகே நிற்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் கையில் கத்தியுடன் கஞ்சா போதையில் நின்றிருந்த அணில் என்கிற பிரேம்குமாரை ஆம்ஸ் ஆக்டில் கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் அவரிடம் இருந்து 10 கிராம் கஞ்சா மற்றும் கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜெயங்கொண்டம்… கத்தியுடன் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த வாலிபர் கைது…..
- by Authour
