மதுரை பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்த போட்டியில் 9 காளைகளை அடக்கிய வீரர் அரவிந்த்ராஜ்(26) 10வது காளையை அடக்க களத்தில் நின்று விளயைாடினார். அப்போது வாடிவாசலில் இருந்து பாய்ந்து வந்த காளை முட்டி தள்ளியதில் அரவிந்தராஜ் வயிற்றில் கொம்பு குத்தியது. இதில் அவர் குடல் சரிந்தது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார். இது போல திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் வேடிக்கை பார்க்க வந்த வீரர் களமாவூர் அரவிந்த் என்பவரும் காளை முட்டி தள்ளியதில் உயிரிழந்தார்.
இந்த நிலையில் இன்று மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டில் இறந்த வீரர் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து அறிவிப்பார் என்றார்.