Skip to content
Home » ஜல்லிக்கட்டு போட்டி…300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

ஜல்லிக்கட்டு போட்டி…300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பூவாயிகுளம் கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் ஆலயம் முன்பாக ஆலய திருவிழாாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.போட்டியில் தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், நாகை, திருச்சி, பெரம்பலூர், சேலம், மதுரை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு களம் கண்டனர். இதில் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சுழற்சிமுறையில் களம் இறக்கப்பட்டனர். காளைகளை அடக்கும்

வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளுக்கும் சில்வர் அண்டா, கட்டில், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்த புனித வனத்து அந்தோணியார் ஆலய ஜல்லிக்கட்டு போட்டியை உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ராஜா சோமசுந்தரம் தலைமையிலான 100-க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!