Skip to content
Home » 3 முக்கிய ஜல்லிக்கட்டு.. காளைகளின் உரிமையாளர்கள் 15 ஆயிரம் பேர் முன்பதிவு..

3 முக்கிய ஜல்லிக்கட்டு.. காளைகளின் உரிமையாளர்கள் 15 ஆயிரம் பேர் முன்பதிவு..

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரம்,, பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள் உலக பிரசித்தி பெற்றவை.  இதில் முதலாவதாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் முன்பதிவு செய்யவேண்டியது அவசியம் என்றும், மூன்றில் ஏதாவது ஒரு பகுதிகளில் நடைபெறும் போட்டிகளில் மட்டும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பங்குபெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. போட்டிகளில் பங்கேற்பதற்கான முன்பதிவு கடந்த 10ம் தேதி தொடங்கிய நிலையில், மாடுபிடி வீரர்களும், மாட்டின் உரிமையாளர்களும் விறுவிறுப்பாக முன்பதிவு செய்துவந்தனர். இந்த நிலையில், முன்பதிவு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. 3 இடங்களில் சேர்த்து சுமார் 15000 ஆயிரம் பேர் தங்களது மாடுகளுக்காக முன்பதிவு செய்திருப்பதாகவும் பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின் தகுதியானவர்கள் டோக்கன்களை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் என அதிகாரிகள் கூறினர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!