Skip to content

ஜெயிலர் பட வில்லன் விநாயகன் கைது….

  • by Authour

அண்மையில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் மலையாள நடிகர் விநாயகன். இவர் எர்ணாகுளத்தில் உள்ள தனது வீட்டில் அதிக அளவு சத்தம் எழுப்பியதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் மது போதையில் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார். பின்னர் விநாயகன் அங்கு காவல் நிலையத்தில் உள்ள அதிகாரியை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து விநாயகனை காவல்துறை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டார்.  இந்த  செய்தி கேட்டு கேரளா திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.  மேலும் “ நடிகர்கள் இப்படி நடந்து கொள்வது ரசிகர்களுக்கு ஒரு அசிங்கத்தை உருவாக்கும்..” என கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!