ரஜினியின் ரசிகர்களுக்கு இன்று திருவிழா என்று தான் சொல்லவேண்டும். காரணம் இன்று ரஜினியின் ஜெயிலர் படம் திரைக்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் 9 மணிக்கு தான் திரையிட்டனர். ஆனால் பெங்களூருவில் காலை 6 மணிக்கே திரையிடப்பட்டது. எனவே தமிழகத்தில் இருந்து பல ரஜினி ரசிகர்கள் முதல் நாள் முதல் ஷோவை காண பெங்களூருக்கு படையெடுத்தனர். இதன் காரணமாகவே பெங்களூரில் இதுவரை இல்லாத அளவிற்கு டிக்கெட் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே கிட்டத்தட்ட 1100 திரையில் ஜெயிலர் திரைப்படத்தை அங்கு திரையிட்டனர்.
இந்நிலையில் இன்று முதல் நாள் காட்சி துவங்கிய நிலையில் ரசிகர்கள் வெடி வெடித்து கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்து ஒரு திருவிழாவை போல கொண்டாடினர். மேலும் ஜெயிலர் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்ததாலும் இப்படம் கண்டிப்பாக தலைவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்களின் விமர்சனங்களை உடனுக்குடன் தெரிவித்து வருகின்றனர்.
ஜெயிலர் வின்னர். முதல் பாதி சூப்பராகவும், இரண்டாம் பாதி ஆவரேஜ் ஆகவும் உள்ளது. இது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஒன் மேன் ஷோ. இன்டர்வெல் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் புல்லரிக்கிறது. மோகன்லால் மற்றும் சிவ ராஜ்குமார் ரோல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. நெல்சன் கம்பேக் கொடுத்துள்ளார் என பலர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் பாதியில் வரும் ட்விஸ்ட் படத்திற்கு பலமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜெயிலர் படத்தில் ஒரு காட்சி கூட போர் அடிக்காது என்றும், நெல்சன் தான் யார் என ஜெயிலர் மூலம் நிரூபித்துவிட்டதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் இதுவரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களையே தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.