Skip to content
Home » திமுக தொண்டரை தாக்கிய ஐடி அதிகாரி…. கரூரில் பரபரப்பு

திமுக தொண்டரை தாக்கிய ஐடி அதிகாரி…. கரூரில் பரபரப்பு

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனைக்கான காரணம் வெளியாகவில்லை. காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமான வரி சோதனைக்காக அதிகாரிகள் கார்களில் வந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த திமுக தொண்டர்கள், வருமானவரித்துறை அதிகாரிகளிடம் நீங்கள் யார்,  வருமான வரித்துறை அதிகாரி என்றால் அடையாள அட்டையை காட்டுங்கள் என்றனர்.

அதற்கு அந்த அதிகாரி, தனக்கு தமிழ் தெரியாது என  ஆங்கிலத்தில் கூறினார். ஆனால் அவர் தமிழ் தெரிந்தவர் தான். நான் உன்னிடம் அடையாள அட்டையை காட்டவேண்டுமா என்ற  நிலையில் தனக்கு தமிழ் தெரியாது என்றார். அப்போது அங்கு திரண்டிருந்த திமுகவினர், அடையாள அட்டை இல்லை என்றால் நீங்கள் ஐடி அதிகாரிகள் என எப்படி நம்புவது,.  அடையாள அட்டையை காட்டிவிட்டு சோதனை செய்யுங்கள் என்றனர்.

இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த அதிகாரி திடீரென திமுக  தொண்டரை சரமாரி தாக்கினார்.  இதில் படுகாயமடைந்த தொண்டர் கீழே விழுந்தார். அவரை மற்ற திமுகவினர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு திரண்டிருந்த திமுகவினர் கடும் கோபத்தில் அதிகாரி வந்த காரின்  கண்ணாடியை  ஓங்கி குததினர். இதனால் கண்ணாடி சேதமடைந்தது. பின்னர் சோதனை நடைபெற்ற இடத்தில்  திமுக தொண்டர்கள் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்ப்பு காரணமாக அதிகாரிகள் அப்பகுதியில் இருந்து புறப்பட்டனர். இதற்கிடையில் மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்ட திமுவினர் அங்கே திரண்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!