திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக திருச்சி வருகை தந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் , முன்னதாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறுகையில்..,
மூன்று தலைவர்களையும் ஒன்றிணைப்பதில் ஈடுபட்டு உள்ளீர்களா என்ற கேள்விக்கு..
புதிது புதிதாக கேள்வி எழுப்புகிறீர்கள் நான் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளேன் மாதம் ஒருமுறை வருவேன என தெரிவித்தார்.
ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நான் எங்கும் பேசவில்லை அந்த வார்த்தையே எங்கும் பயன்படுத்தவில்லை.
அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து வெற்றியை பெற்று உள்ளோம், சில துரோகிகளால் அங்கு தோல்வி ஏற்பட்டது எனக் கூறினேன் அத்தாணியில் உள்ள அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பேசினேன்.
பாஜகவில் இணைந்தால் நல்லது என ஓபிஎஸ் கூறியதற்கு…. அவரிடம் தான் கேள்வி கேட்க வேண்டும்.
மூத்த தலைவராக இருந்தாலும்.., எதை வேண்டுமானாலும் சொல்ல முடியாது. அரசியல் கட்சியில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்று கிடையாது. அமைதியாக அவரவர் வேலையை பார்த்தால் நல்லது என தெரிவித்தார்.
அதிமுக சின்னம் இரட்டை இலை விவகாரம் குறித்து சிவி சண்முகம் பதிலளிப்பார். அவர்தான் வழக்கறிஞர், சட்டமன்றத்தில் வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருக்கிறார். அவர்தான் அது குறித்து பதில் அளித்து வருகிறார், அது குறித்து தாங்கள் யாரும் பதில் கூறுவதில்லை…
அதிமுக பாஜக மறைமுக கூட்டணிக்கு இந்த நிகழ்வுகள் நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு…
அதனை பொதுச் செயலாளர் இடம் தான் கேட்க வேண்டும். நான் ஒரு சாதாரண தொண்டன். நான் சொன்ன ஒரே கருத்து தான், விவசாயிகள் என்னை பார்க்க வந்த போது அழைப்பிதழ் கொடுத்தார்கள். அதில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் , ஜெயலபடங்கள் இல்லை என்ற ஆதங்கத்தை கூறினேன். அனைவரும் கூட்டத்தை புறக்கணித்ததாக கூறினர்கள், நான் புறக்கணிக்க வில்லை, கலந்து கொள்ளவில்லை என்று கூறினேன் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திருச்சியில் பேட்டி அளித்தார்.