இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் இன்று பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 84. வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கஸ்தூரி ரங்கன் இன்று காலமானார். ,இவர் 1994- 2003 வரை இஸ்ரோ தலைவராக இருந்தார். இவர் பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன் போன்ற விருதுகளை பெற்றவர். திட்டக்கமிஷன் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
கஸ்தூரி ரங்கனின் மூதாதையர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 1940 அக்டோபர் 24ல் பிறந்தார். இவர் ராஜஸ்தான் மற்றும் NIIT பல்கலைக்கழக துணைவேந்தராகவும் இருந்தார். இவரது குடும்பம் மும்பையில் குடியேறியது. அங்கு தான் கஸ்தூரி ரங்கன் ஆரம்ப கல்வி கற்றார்.