டெல்லியில் நேற்று இரவு நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் அக்சர் படேல், 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். ஸ்டப்ஸ் 34, ராகுல் 38, அபிஷேக் போரெல் 49 ரன்கள் எடுத்தனர்.
சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 5 பந்துகளில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்தது. அந்த ஓவரை டெல்லி தரப்பில் ஸ்டார்க் வீசினார். 0, 4, 1, 4 (நோ-பால்), ரன் அவுட், ரன் அவுட் என அமைந்தது.
12 ரன்கள் எடுத்தால் வெற்றி என சூப்பர் ஓவரில் ஆடியது டெல்லி. கே.எல்.ராகுல் மற்றும் ஸ்டப்ஸ் அந்த ஓவரில் விளையாடினர். சந்தீப் சர்மா ஓவரை வீசினார். 2, 4, 1, 6 என விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது டெல்லி அணி.
கடந்த 2022-ம் ஆண்டு சீசனுக்கு பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் சூப்பர் ஓவராக இது அமைந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மொத்தமாக 15 சூப்பர் ஓவர்கள் விளையாடப்பட்டு, ஆட்டத்தின் முடிவு எட்டப்பட்டுள்ளது.