Skip to content

வாடிகனில்….. போப் ஆண்டவரை சந்தித்த திருச்சி இனிகோ இருதயராஜ் MLA

  • by Authour

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ்க்கு,  அகில உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்  அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பின் பேரில்  இத்தாலியில் உள்ள  வாடிகன் சென்ற இனிகோ இருதயராஜ், போப்  பிரான்சிஸ்சை  சந்தித்து உரையாடினார். அப்போது போப் அவருக்கு ஆசி வழங்கினார்
இந்த சந்திப்பின் போது இந்தியாவில் கிறிஸ்தவர்களின் நிலை ,தமிழகத்தில் சிறுபான்மை கிறிஸ்துவ மக்களுக்கு

நிறைவேற்றப்படும் சீர்மிகு திட்டங்கள் குறித்தும், அதனால் அவர்களின் ஏற்றமிகு வாழ்க்கை சூழல் குறித்தும் எடுத்துரைத்ததோடு திருத்தந்தை  போப்  பிரான்சிசை   இந்தியாவிற்கு வருமாறு அன்புடன் அழைப்பு விடுத்தார்.
இந்திய வருகையின் போது, தவறாமல் தமிழகத்திற்கு வரவேண்டும் என்றும், தங்களை வரவேற்பதற்காக தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார் என்கின்ற தகவலையும்  இனிகோ, போப்பிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!