சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு இந்திய பவுலர்கள் சிம்மசொப்பனமாக திகழ்ந்தனர். இதனால், அந்த அணியால் ரன்களை குவிக்க முடியாமல் திணறியது. மிட்செல் (63), பிரேஸ்வெல் (53 நாட் அவுட்), ரச்சின் ரவீந்திரா (37), பிலிப்ஸ் (34) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் 251 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். தொடர்ந்து, 252 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, கேப்டன் ரோகித் ஷர்மா, கில் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். ரோகித் ஷர்மா, சிக்சர்களும், பவுண்டரிகளுமாக பறக்க விட்டார். இதனால், 41 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். 17 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 100 ரன்கள் குவித்தது. அணியின் ஸ்கோர் 105ஆக இருந்த போது கில் 31 ரன்னில் சான்ட்னர் பந்தில் அவுட்டானார். கவர் திசையில் தூக்கி அடிக்கப்பட்ட பந்தை, பிலிப்ஸ் பாய்ந்து சென்று கேட்ச் பிடித்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீளுவதற்குள், கோலி 1 ரன்னில் வந்த வேகத்தில் ஆட்டமிழந்தார். பிரேஸ்வெல் பந்தில் எல்.பி.டபுள்யூ., முறையில் அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய கேப்டன் ரோகித் ஷர்மா, 76 ரன்னில் ரச்சின் ரவீந்திரா பந்தில் ஸ்டம்பிங் முறையில் அவுட்டானார். இதன்முலம் வெறும் 17 ரன்னுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதன்பிறகு ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்ஷர் படேல் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. இதனால், இந்திய அணி மெல்ல மெல்ல வெற்றியை நெருங்கியது. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, அக்ஷர் படேலும் 29 ரன்னில் அவுட்டானார். தற்போது, வெற்றியை நோக்கி இந்திய அணி மெல்ல மெல்ல முன்னேறியது. பின்னர் கே.எல். ராகுல் மற்றும் பாண்டியா இருவரும் சிறப்பாக ஆடினர். இறுதி வரை இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாண்டியா திடீரென அவுட்டாக பின்னர் வந்த ஜடேஜா வெற்றிக்கான ஷாட்டை அடித்து வெற்றியை உறுதிப்படுத்தினார். கே.எல். ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்திருந்தார். இதன்மூலம், 3வது முறையாக இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி அண்மையில் டி20 உலகக்கோப்பையை வென்றிருந்தது. தற்போது, சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றுள்ளது. இந்த போட்டியில் 76 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது, நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திராவிற்கு வழங்கப்பட்டது.
12 ஆண்டுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வென்றது இந்தியா..
- by Authour

Tags:India wins Champions TrophyRohit Sharma won the Man of the Match awarஇந்திய கிரிக்கெட் அணிசாம்பியன் டிராபியை வெற்றது இந்தியா