நான் விரும்பும் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவேன் என மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் தனியார் தொலைக்காட்சிக்கு தோனி அளித்த பேட்டி… தான் வீல் சேரில் இருந்தாலும், சிஎஸ்கே அணி தன்னை விளையாட களத்துக்கு இழுத்து வந்துவிடும் என விளையாட்டாக கூறியுள்ள தோனி “இது என்னுடைய ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் அணி. நான் விரும்பும் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக என்னால் தொடர்ந்து விளையாட முடியும் என அவர் கூறியுள்ளார். கடந்த 2023 சீசனில் அவரது தலைமையிலான சிஎஸ்கே அணி 5-வது முறையாக ஐபிஎல் பட்டம் வென்றது. அதன் பின்னர் கடந்த சீசனில் அணியின் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் வசம் தோனி ஒப்படைத்தார். அணியில் விக்கெட் கீப்பராக விளையாடி வரும் தோனி, தனது ஓய்வு குறித்த எந்த அறிவிப்பையும் இதுவரை அறிவிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
விரும்பும் வரை சிஎஸ்கேவில் விளையாடுவேன்.. தோனி பேட்டி
- by Authour
