மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீப காலமாக வீடுகள், கோயில்கள் உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளையடிக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகா அன்னவாசல் ஊராட்சி கழனிவாசல் மெயின் ரோட்டை சேர்ந்த சோமசுந்தரம்(58) விவசாயி. இவரது மனைவி அருள்செல்வி (55), இரண்டு மகன்களுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல வீட்டின் கதவை சாத்திவிட்டு இரவு தூங்கி கொண்டிருக்கும் போது நள்ளிரவு 12.50 மணியளவில் வீட்டில் வாசல் கதவு வழியாக மர்ம நபர்கள் உள்ளே சென்று தூங்கிக் கொண்டிருந்த அருள்செல்வியின் கழுத்தில் இருந்த தாலி, தாலி குண்டு, தாலி ஜெயின் உள்ளிட்ட 6அரை பவுன் நகையை அருத்து சென்றுள்ளனர். அருள்செல்வியின் சத்தம் போட்ட உடனே வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மர்ம நபர்களை தேடியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பூர் மற்றும் குத்தாலம் காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அருள்செல்வியின் கழுத்தில் லேசானகாயம் உள்ளது. நள்ளிரவில் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவரின் கழுத்தில் இருந்த ஜெயினை மர்மநபர்கள் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
