வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை நீடிக்கும். சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாள கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை முதல் திருச்சி மாவட்டத்தில் அவ்வப்போது பரவலாக லேசான மழை தூறிக்கொண்டே இருந்தது.
பிற்கல் 2.40 மணிக்கு திருச்சி மாநகரில் கனமழை கொட்டியது. காற்றும் பலமாக வீசியது.இதனால் திருச்சி நகரம் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இதுபோல தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.