Skip to content

நடுவானில் பயணிக்கு மாரடைப்பு…. சென்னையில் தரையிறக்கப்பட்ட விமானம்

அமெரிக்காவின் முக்கிய வர்த்தக நகரான நியூயார்க்கில் இருந்து 318 பயணிகளுடன்  சிங்கப்பூர் சென்ற அந்த விமானத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த கென்னடி என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, சென்னை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த பயணி, சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அதைத்தொடர்ந்து   விமானம் 4 மணி நேரம் தாமதமாக சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!