Skip to content
Home » கரூர் ஏட்டு பணி நிறைவு…..இன்ஸ்பெக்டர் அளித்த மரியாதை

கரூர் ஏட்டு பணி நிறைவு…..இன்ஸ்பெக்டர் அளித்த மரியாதை

கரூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பழனிவேல். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் தலைமை வகித்தார். விழாவில் ஏட்டு பழனிவேலுவுக்கு ஆய்வாளர் மணிவண்ணன், எவர்கிரீன் பவுண்டேஷன் சேர்மன் ஸ்காட் தங்கவேல், உதவி ஆய்வாளர் மாரிமுத்து உள்ளிட்ட சக போலீசார் வாழ்த்தி  நினைவு பரிசுகளை வழங்கினர்.

குடும்பத்துடன் பணி நிறைவு பாராட்டு விழாவுக்கு வருகை தந்த தலைமை காவலரை, காவல் ஆய்வாளர் மணிவண்ணன் அவரது கைகளை பிடித்து அழைத்து வந்து, தனது போலீஸ் ஜீப்பில் கார் கதவை திறந்து அவரை முன் இருக்கையில் அமர வைத்து கைகுலுக்கி வாழ்த்தி வழி அனுப்பினார்.

இன்ஸ்பெக்டரின் இந்த உபசரிப்பு, பணி நிறைவு பெற்ற காவலருக்கு இன்ப அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் தந்தது. அத்துடன்  அவரை கௌரவப்படுத்தி தனது போலீஸ் ஜீப்பை கொடுத்து கைகுலுக்கி வாழ்த்தி அனுப்பியது அவரது குடும்பத்தினரையும்,  சக  போலீசாரையும் மெய்சிலிர்க்க வைத்தது. தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!