Skip to content
Home » அரியானா வாக்குப்பதிவு விறுவிறுப்பு…..

அரியானா வாக்குப்பதிவு விறுவிறுப்பு…..

அரியானா  சட்டப்பேரவைத் தேர்தல்  இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு  மாலை 6 மணி வரையில் நடக்கவுள்ளது.

தோ்தலில் வாக்களிக்க 2 கோடிக்கும் மேற்பட்டோர் தகுதி பெற்றுள்ளனா். இவா்களுக்காக 20,629 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் 89 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் ஓரிடத்திலும் களத்தில் உள்ளன. இதுதவிர, ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக் தளம், ஜனநாயக ஜனதா கட்சி ஆகியவையும் மோதுவதால் பலமுனைப் போட்டி நிலவுகிறது. எனினும், பாஜக, காங்கிரஸ் இடையேதான் முக்கியப் போட்டி என்று அரசியல் பார்வையாளா்கள் கூறுகின்றனா்.  1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மாநிலத்தில் 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருப்பதால், இம்முறை மக்கள் தங்களுக்கு வாய்ப்பளிப்பா் என்பது காங்கிரஸின் நம்பிக்கையாக உள்ளது. காஷ்மீர், அரியானா மாநில வாக்கு எண்ணிக்கை அக்டோபா் 8-ம் தேதி  நடைபெறவுள்ளது. அன்று பிற்பகலுக்குள் இருமாநிலத்திலும் யார் ஆட்சி என்பது தெரிந்து விடும். இன்று மாலை 6 மணிக்கு மேல் ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!