Skip to content

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்….மகிழ்ச்சி அளிக்கிறது….. அமைச்சர் ரகுபதி பேட்டி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  உச்ச நீதிமன்றம்  ஜாமின் வழங்கி உள்ளது. இதை எடுத்து புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி  கூறியதாவது:

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.  சட்ட போராட்டம் நடத்தி செந்தில் பாலாஜி வெற்றி பெற்று இருக்கிறார்.

கடந்த 15 மாதங்களாக பொறுமையாக இருந்து நீதிமன்ற விதிமுறைகளை மதித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜாமீன் பெற்று இருப்பது செந்தில் பாலாஜிக்கு கிடைத்த வெற்றி.  ED போன்ற மத்திய அரசின் அமைப்புகளை எதிர்த்து , நீதிமன்றத்தில் ED போன்ற அமைப்பின் கடுமையான எதிர்ப்பை முறியடித்து ஜாமின்  பெற்றிருப்பது மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!