தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டிசென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை ஜூன் 5 ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டில்லி சென்று ஜனாதிபதியை நேரில் சென்று திறப்பு விழாவுக்கு அழைத்தார். முதல்வரின் அழைப்பை ஏற்று, மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வர உள்ளதாக ஜனாதிபதி அறிவித்தார்.
மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வரும் ஜனாதிபதிநந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்ளவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் ஜூன் 5ம் தேதி குடியரசுத்தலைவருக்கு வேறு முக்கிய பணிகள் இருப்பதால் அவரது அன்றைய தினம் சென்னை வர முடியாத நிலை உருவானது. எனவே மருத்துவமனை திறப்பு விழா ஜூன் 5ம் தேதிக்கு பதில் வேறு ஒரு தேதியில் நடைபெறும் என தெரிகிறது.