Skip to content

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு வெளியீடு…

  • by Authour

கிராம நிர்வாக அலுவலர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ந்தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழ்நாடு முழுவதும் 18 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்படுவதாக இருந்த நிலையில், முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து சமூக வலைதளங்களில் தேர்வு முடிவை வெளியிடக்கோரி தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி இந்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவு வெளியாகும் என்று தேர்வை நடத்திய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் இன்று பிற்பகலில் வெளியிடப்பட்டது. இதனால், தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தேர்வு முடிவை அறிய ஒரே நேரத்தில் தேர்வர்கள் இணையதளத்தை பயன்படுத்தியதால், டிஎன்பிஎஸ்சி இணையதளம் முடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!