Skip to content
Home » மூதாட்டியிடம் 6 பவுன் தாலிச்செயின் பறிப்பு….. திருச்சியில் சம்பவம்…

மூதாட்டியிடம் 6 பவுன் தாலிச்செயின் பறிப்பு….. திருச்சியில் சம்பவம்…

  • by Senthil

விருதுநகர் மாவட்டம், சூலக்கரைமேட்டை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். பின்னர் தரிசனம் செய்துவிட்டு உத்தமர் கோவில் செல்வதற்காக நம்பர் ஒன் டோல்கேட்  பஸ்சிற்காக நின்று கொண்டிருந்தார்.  அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த  6 பவுன் தாலி செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சியானார்.  இதனை தொடர்ந்து தாலி செயினை மர்மநபர்கள் யாரேனும் பறித்து சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரின் கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!