Skip to content
Home » மதுக்கூர் அரசு மகளிர் மேல்நிலைபள்ளியில் அறிவியல் கண்காட்சி….

மதுக்கூர் அரசு மகளிர் மேல்நிலைபள்ளியில் அறிவியல் கண்காட்சி….

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் மதுக்கூர் -வடக்கு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் மன்றம் மற்றும் வானவில் மன்றம் சார்பாக அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்து துவங்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் மாணிக்கம் ஆலோசனைகள் வழங்கினார்.

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிகண்டன், பொருளாளர் ரெங்கராசு, ஆசிரியர் சுமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பேரிடர் மேலாண்மை, நீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, அறிவியல் தத்துவங்கள் மற்றும் இயற்கை உணவு ஆகிய தலைப்புகளில் 300-க்கும் மேற்பட்ட படைப்புகளை மாணவிகள் காட்சிப்படுத்தி இருந்தனர். ஏற்பாடுகளை தாரகேஸ்வரி உட்பட அறிவியல் ஆசிரியர்கள் செய்திருந்தனர். சுமார் 1500 மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டனர். ஆசிரியர் இருளப்பசாமி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!