Skip to content

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்… கரூர் கலெக்டர் வழங்கினார்…

கரூர் மாவட்டத்தில் 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பில் 6397 மாணவ மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட உள்ளது.

அதன் தொடக்கமாக மண்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று 119 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார். ஒவ்வொரு மிதிவண்டியுடன் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் வாரண்ட்டி அட்டையும் வழங்கப்பட்டது. சைக்கிள் பிரேம், ஃபோர்க் ஆகியவைகளுக்கு 5 ஆண்டுகள் மற்றும் பெடல், ரிம், கைப்பிடி உள்ளிட்ட உதிரி பாகங்களுக்கு 3 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் கூடிய வாரண்டி அட்டை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!